ஆயுதங்களுடன் டெண்டர் எடுக்க வந்த இருவர் கைது
நெல்லை: நெல்லையில் சுருள்வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் டெண்டர் எடுக்க வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள மாட்டு சந்தையை குத்தகைக்கு ஏலம் எடுக்க எப்போதும் கடும் போட்டி இருக்கும். இந்நிலையில் தற்போது இந்த ஏலம் விடுவதற்கு டெண்டர் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
கடந்த முறை ஏலம் எடுத்தவர்களும், புதிதாக ஏலம் எடுக்க சிலரும் மேலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்திற்கு வந்தனர்.
இதற்கிடையே டெண்டர் மனு செய்பவர்களிடையே ஏதேனும் மோதல் ஏற்படலாம் என்று உளவுதுறையினர் போலீசார் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனால் டெண்டர் மனு செய்யப்படும் இடத்தில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பழனிமுருகன், சங்கரபாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் சார்பில் சிலர் டெண்டர் மனு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் சோதனையிட்ட போது சுருள்வாள், இரும்பு ராடு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் தென்காசி குளத்தூர் அய்யனார் தெருவை சேர்ந்த ஷேச் மீரான் மகன் சுலைமான், மேலப்பாளையத்தை சேர்ந்த காஜாமூகைதின் மகன் முகமது சாலி ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றன்ர.
சுலைமான் மீது ஏற்கனவே தென்காசி காவல் நிலையத்திலும், முகமது சாலி மீது அச்சன்புதூர் காவல் நிலையத்திலும் கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications