பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் மீது கொலை மிரட்டல் வழக்கு
பொள்ளாச்சி: பிரசாரத்தின் போது முற்றுகையிட்ட பொது மக்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமார் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் சுகுமார் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்னும் 3 நாட்களில் முடிந்துவிடும் என்பதால் அவர் தொகுதியில் சுறுசுறுப்பாக பிரசாரம் செய்து வருகிறார்.
கிணத்துகடவு பகுதியில் காளியணண் புதூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அவருடன் கிணத்துக்கடவு அதிமுக எம்எல்ஏ தாமோதரன், மற்றும் செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உடன் சென்றனர்.
அப்போது கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையை சேர்ந்த சிலர் சுகுமாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தின் போது சுகுமார் அவர்களை கொன்று விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சுகுமாரன் மற்றும் அவருடன் வந்தவர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையினர் நெகமம் - கோவில்பாளையம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து அதிமுக வேட்பாளர் சுகுமார், எம்எல்ஏ தாமோதிரன், செங்கோட்டையன், மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேசமயத்தில் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தடுத்தவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினரும் பொள்ளாச்சி சாலையில் மறியல் செய்தனர்.
இதையடுத்து அதிமுக பிரச்சராத்தை தடுத்த கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையைச் சேர்ந்த 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications