ஜூனுக்குள் 10 கோடி சந்தாரர்கள்!-பார்தி ஏர்டெல்
டெல்லி: இந்தியாவின் முன்னணி தனியார் தொலைபேசி நிறுவனமான ஏர்டெல் விரைவிலேயே 10 கோடி சந்தாதாரர் என்ற எண்ணிக்கையைத் தொடப் போகிறது.
இந்திய தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்று இந்த அளவு அதிக சந்தாரர்களைப் பெற்றுள்ளது இதுவே முதல்முறை என அறிவித்துள்ளது பார்தி ஏர்டெல்.
இந்த நான்காவது காலாண்டின் முடிவில் பார்தியின் சந்தாதாரர் எண்ணிக்கை 9.6 கோடியாக இருந்தது. கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே இந்த நிறுவனத்தில் புதிய சந்தாதாரர்களாக 3.5 கோடி வாடிக்கையாளர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். சராசரியாக மாதம் ஒன்றுக்கு 20 லடட்சம் சந்தாதாரர்கள் சேர்கிறார்களாம்.
"தனியார் தொலைபேசி நிறுவனங்களில் இத்தனை வேகமான வளர்ச்சி பார்திக்கு மட்டுமே. இந்தத் துறையில் நாட்டின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றும்கூட. எனவே வரும் ஜூன் மாதத்துக்கு முன்பாகவே 10 கோடி சந்தாதாரர்கள் என்ற இலக்கை எட்டிவிடும் பார்தி ஏர்டெல்' என்கிறார் ஏர்டெல் சிஇஓ மனோஜ் கோஹ்லி.