வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா - அதிமுக நிர்வாகிக்கு அடி உதை
கரூர்: கரூர் அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த கரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கணேசனை திமுகவினர் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராக இருப்பவர் கணேசன். இவர் சேங்கல் அருகே உள்ள பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்படுகின்றது.
தகவல் அறிந்த திமுகவைச் சேர்ந்த ரமேஷ் பாபு, புதுக்கோட்டை ரவி உள்பட முக்கிய நிர்வாகிகள் அப் பகுதிக்கு சென்றனர். அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த கணேசனை அடித்து உதைத்தனர்.
இதில் கணேசன் பலத்த காயம் அடைந்தார். அவரை திமுக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கணேசன் தலையிலிருந்து ரத்தம் கொட்டியதால், சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த தாக்குதலை கண்டித்து அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் கரூர் தாலுகா அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்பாட்த்தில் அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, தேர்தல் தோல்வி பயத்தில் தி.மு.க.,வினர் ரவுடிகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.












Click it and Unblock the Notifications