For Daily Alerts
Just In
சரவண பவன் ராஜகோபால் ஜாமீனில் விடுதலை
டெல்லி: கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்லது.
ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 19ம் தேதி சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மற்றும் அவரது ஊழியர்கள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந் நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அகர்வால், சிங்வி, சவுகான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜகோபாலுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தனர்.
Story first published: Thursday, May 14, 2009, 11:16 [IST]