பணநாயகம் தோற்று ஜனநாயகம் வெல்லும்-ராமதாஸ்
திண்டிவனம்: தமிழகத்தி்ல் திமுகவின் பணநாயகம் வெற்றி பெறாது. ஜனநாயகம் தான் வெற்றி பெறும். 40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என
பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் நேரு வீதியில் உள்ள முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் மனைவி சரஸ்வதி, மகன் டாக்டர் அன்புமணி, மருமகள் செளம்யா ஆகியோருடன் வந்து ராமதாஸ் ஓட்டு போட்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
திமுக தலைவர் கருணாநிதி மீள முடியாத ஒரு களங்கத்தை தமிழகத்துக்கு ஏற்படுத்தி விட்டார். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் 2வது இடத்தில் இருந்த தமிழகத்தை முதலிடத்துக்கு மாற்றி கறைபடிந்த வரலாற்றை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால், பணநாயகம் வெற்றி பெறாது. ஜனநாயகம் தான் வெற்றி பெறும்.
40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக-காங்கிரசுக்கு மக்கள் தங்களது வாக்குகள் மூலம் பாடம் கற்பித்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் நல்ல முடிவை தருவார்கள். ஊழல்களின் மொத்த உறைவிடமே திமுக தான். கள்ள ஓட்டு போடுவதை உருவாக்கியதும் திமுக தான். திமுகவினர் விஞ்ஞான முறையில் சிந்தித்து ஊழலை செய்பவர்கள். இந்த விஷயத்தில் அவர்களுடன் யாரும் போட்டி போடவே முடியாது என்றார்.
ஓட்டளிக்க ரூ. 1000 கோடி பணம்...
அன்புமணி கூறுகையில், சுதந்திர இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத அளவுக்கு கடந்த 2 நாட்களாக ரூ.100 முதல் ரூ. 1000 வரை தமிழகத்தில் 4 கோடி வாக்காளர்களுக்கும் என ரூ. 1000 கோடி வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறி வெட்ககேடான செயல்களில் ஈடுபட்டுள்ள திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications