திமுக பிரமுகரிடம் கொள்ளையடித்த பாமக ஒன்றியம்
விழுப்புரம்: திமுக பிரமுகரிடம் ரூ. இரண்டு லட்சம் கொள்ளை அடித்த சங்கராபுரம் பாமக ஒன்றிய தலைவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வடசிறுவளூரைச் சேர்ந்தவர் பாண்டியன். திமுகவின் கிளை பிரதிநிதி. இவர், கடந்த 10ம் தேதி ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்துடனும், அவரது நண்பர் ரூ. 20 ஆயிரத்துடனும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சங்கராபுரம் ஒன்றியச் சேர்மன் சந்திரசேகர், ஆட்டோ செல்வம் தலைமையில் சுமார் 10 பேர் பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்து அவர்களை வழிமறித்து இரண்டு லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகின்றது.
இது குறித்து பாண்டியன் சங்கராபுரம் காவல் நிலயைத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி சந்திரசேகர், ஆட்டோ செல்வத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.
அப்போது எடப்பாடி பாமக எம்எல்ஏ காவேரி, எலவனாசூர் கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று பாமக நிர்வாகிகளை விடுதலை செய்யக் கோரி அங்கு போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.
ஆனால், அவரை போலீசார் காவல் நிலைய வளாகத்திலிருந்து வெளியேற்றினர். அதன்பிறகு சந்திரசேகர், ஆட்டோ செல்வம் ஆகிய இருவரை சங்கராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications