For Daily Alerts
Just In
அடுத்த 2 மாதங்களில் 3000 பேரை பணியமர்த்தும் ஐசிஐசிஐ புரூடன்சியல் லைப்
மும்பை: நாட்டின் முன்னணி தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ புரூடன்சியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், அடுத்த 2 மாதங்களில் 3000 பேரை பணியில் அமர்த்தவுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு நிர்வாகியும், முதுநிலை துணை தலைவருமான சுஜித் கங்குலி கூறுகையில், நாங்கள் வளரும் நிறுவனம். அடுத்த இரண்டு மாதங்களில் 3000 பேரை அமர்த்தும் பணியைத் தொடங்கியுள்ளோம். அப்பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது.
மார்ச் மாத நிலவரப்படி நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை 25 ஆயிரமாக இருந்தது.
இந்தியா முழுவதும் 2000 கிளைகள் எங்களுக்கு உள்ளன என்றார் சுஜித் கங்குலி.
Comments
Story first published: Thursday, May 14, 2009, 15:41 [IST]