Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பங்குச் சந்தையில் சரித்திரம் காணாத உயர்வு: இன்றைய வர்த்தகம் நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

Sensex
மும்பை: காலை பங்கு வர்த்தகத்தின் ஆரம்பத்திலேயே 1300 புள்ளிகள் உயர்ந்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பங்கு வர்த்தகம், மீண்டும் துவங்கிய 30 நிமிடங்களுக்குள் 20 சதவிகித உயர்வைச் சந்தித்தது. 2099 புள்ளிகளை சில நிமிடங்களில் தாண்டி, சென்செக்ஸ் குறியீட்டெண் 14272 ஆக உயர்ந்த போது, இன்றைய நாளின் வர்த்தகத்தையே அடியோடு நிறுத்துவதாக செபி அறிவித்துவிட்டது.

இந்திய பங்குச் சந்தை வரலாற்றிலேயே சில நிமிடங்களில் பங்குச் சந்தையில் இந்த அளவு புள்ளிகள் உயர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

இன்றைய நாளின் வர்த்தகத்தில் எந்த பங்குமே நஷ்டத்தில் கைமாறவில்லை. அனைத்து முன்னணி நிறுவனப் பங்குகளும் மிகப் பெரிய லாபத்தில் கைமாறின.

வங்கித் துறை மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகள் எதிர்பாராத அளவு உயர்ந்துவிட்டன. தொழில்நுட்பத் துறைப் பங்குகளும் இன்று தாறுமாறாக உயர்ந்தன.

ரிலையன்ஸ் இன்ப்ரா ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனப் பங்குகள் மட்டும் 20 சதவிகிதம் விலை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுத்தன.

ஐசிஐசிஐ, லார்சன் அண்ட் டூப்ரோ, ஜெய்ப்ரகாஷ் அஸோஸியேட்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் 19 சதவிகிதம் வரை உயர்ந்தன.

நிப்டியில் 639 புள்ளிகள் உயர்ந்ததால் பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இதில் மொத்தம் 202 பங்குகள் மீது மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் நிலையைன அரசு என்ற நம்பிக்கை காரணமாக குவியத் துவங்கியுள்ள அந்நிய முதலீடுகள் போன்றவையே இன்றைய உயர்வுக்குக் காரணம்.

ஆனால் ஒரு அளவுக்கு மேல் பங்குச் சந்தையில் உயர்வை அனுமதிக்க முடியாததால், இன்றைய நாளின் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+