வாந்தி, பேதி-50 பேர் மருத்துவமனையில் அனுமதி
பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மக்கள் வாந்தி-பேதி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள பூலாங்குளம் கிராமம், பால்பண்னை தெருவை சேர்ந்த சிலருக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த மேலும் 50 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு, கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் தென்காசி, ஆலங்குளம், பாவூர்சத்திரம் தனியார் மருத்துவமனையிலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர் கூறுகையில்,
எங்கள் தெருவில் குடிநீர் தொட்டி சுகாதாரமான இடத்தில் இல்லை. அதில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீரை பால்பண்ணை தெருவை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எனது மனைவி வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டார். நேற்று எனக்கும் வாந்தி பேதி ஏற்பட்டது என்றார்.
பூலாங்குளத்தில் கடந்த முறை பருவ மழையின்போது இதே ஊரை சேர்ந்த குழந்தைகள் உள்பட பலர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர். தற்போது கோடையிலும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த திடீர் வாந்தி, பேதிக்கு என்ன காரணம் என்பது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications