22ம் தேதி மத்திய அரசு பதவியேற்பு!-காங்.குக்கு மாயாவதி ஆதரவு

மேலும் லோக்சபா காங்கிரஸ் தலைவராக பிரணாப் முகர்ஜியும், ராஜ்யசபா காங்கிரஸ் தலைவராக மன்மோகன் சிங்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்பி்க்களின் கூட்டம் நாடாளும்ன்றத்தின் மத்திய மண்டபத்தில் இன்று காலை நடந்தது. இதில் இந்தப் பதவிகளுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நாளை நடக்கிறது. இதி்ல் கூட்டணியின் தலைவராக சோனியா மீண்டும் தேர்வு செய்யப்படுவார்.
மேலும் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து இந்தக் கூட்டணிக் கட்சிகள் கடிதம் வழங்கும்.
இதையடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரி ஜனாதிபதியிடம் மன்மோகன் சிங் கடிதம் வழங்குவார். இதைத் தொடர்ந்து ஆட்சியமைக்க மன்மோகனுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் வழங்கிவிட்டு வரும் வெள்ளிக்கிழமை புதிய அரசு பதவியேற்கும் என்று தெரிகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 262 இடங்களில் வென்றுள்ள நிலையில் ஆட்சி்யமைக்க மேலும் 10 எம்பிக்களின் ஆதரவே தேவை.
இந் நிலையில் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் முன் வந்துள்ளது. அந்தக் கட்சிக்கு 3 எம்பிக்கள் உள்ளனர்.
இவர்கள் தவிர சீட் கிடைக்காமல் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற இரு அதிருப்தி காங்கிரஸ் எம்பிக்களும் ஆதரவு தர முன் வந்துள்ளனர்.
அதே போல 4 எம்பிக்கள் கொண்ட லாலு பிரசாத் யாதவும் ஆதரிக்க முன் வந்துள்ளார்.
இவர்களை எல்லாம் தவிர, காங்கிரஸ் கூட்டணிக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் நிபந்தனையின்றி ஆதரிக்க முன் வந்துள்ளது. அந்தக் கட்சிக்கு 21 எம்பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மெஜாரிட்டியை நிரூபிப்பதில் காங்கிரசுக்கு எந்த சிக்கலும் இல்லை.
இதற்கிடையே வரும் 22ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications