பிரபாகரன்-நெல்லையில் தேசிய கொடிக்கு பதில் கறுப்பு கொடி!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாளையங்கோட்டை அருகே தேசிய கொடி ஏற்றும் இடத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி, அரசு ஊர்தி ஓட்டுனர் குடியிருப்பு அருகே வரசித்தி வினாயகர் கோவில் பகுதியில் உள்ள தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தில் யாரோ கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
வழக்கமாக சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களின் போது அப்பகுதி மக்கள் இதில் தான் தேசிய கொடி ஏற்றுவார்கள். இந்த நிலையில் இந்த கொடி கம்பத்தில் கருப்பு கொடி பறந்தது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications