சென்செக்ஸ்: இன்று 324 புள்ளி வீழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்றும் வீழ்ச்சிப் போக்கே நிலவியது. இன்று ஒரே நாளில் 300 புள்ளிகளுக்கும் மேல் குறைந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 60 புள்ளிகள் வரை குறைந்து விட்டது.
திங்கள் கிழமை 2100 புள்ளிகள் வரை திடீரென்று உயர்ந்த சென்செக்ஸ் அதன்பிறகு தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கிலேயே உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம், இன்போஸிஸ், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், எல் அண்டு டி, பிஎச்இஎல் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் இன்று சடசடவென விலை சரிவுக்குள்ளாகின.
பணவீக்கம் 0.61 சதவிகிதமாக உயர்ந்ததாலும் இந்த நிலை ஏற்பட்டதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கூறினர்.
வர்த்தக நேர முடிவில் நிப்டி தனது 14000 புள்ளிகள் என்ற சாதனை அளவிலிருந்து கீழிறங்கிவிட்டிருந்தது.
சென்செக்ஸ் 13,736.54 புள்ளிகளாகவும், நிப்டி 4,210.90 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.












Click it and Unblock the Notifications