ஆள் மாறாட்டம் செய்த போலீஸார் சஸ்பெண்ட்!
திருநெல்வேலி: நீதி மன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்த மூன்று போலீசாரை திருநெல்வேலி எஸ்பி அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
திருநெல்வேலி அருகே உள்ளது கல்லிடைக்குறிச்சி. இங்கு டாஸ்மாக் பாரில் கட்டிங் விற்றதாக பார் ஊழியர் மாடசாமி மீது ஆலங்குளம் மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் மாடசாமிக்கு பதிலாக குமார் என்பவரை நெல்லை கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தினார்கள்.
இதை விசாரணையின் போது கண்டுபிடித்த நீதிபதி போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் நீதி மன்றத்தை ஏமாற்ற முன்ற குமாரை கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து நெல்லை எஸ்.பி., அஸ்ரா கார்க் தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணை முடிவில் நீதி மன்றத்தில் ஆள் மாற்றம் செய்ய காரணமாக இருந்த காவலர்கள் பாலமுருகன், தட்சிணா மூர்த்தி, மனோகரன் ஆகிய மூவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications