கோவில் விழாவில் போலீஸ் ஏட்டு திடீர் மரணம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: கோவில் திருவிழாவிற்கு சென்ற காவல்துறை தலைமைக் காவர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மணியாச்சி அருகே உள்ள பூவாணியை சேர்ந்தவர் ஆண்டி (வயது 54). இவர் எப்போதும் வென்றான் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். .
இந்த நிலையில், பூவாணியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆண்டி சென்றார். அங்கு அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications