சென்னையில் மருத்துவ மாணவர் மர்ம மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த 3ம் ஆண்டு மாணவர் விடுதி அறையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
வேலூர் மாவட்டம் பேராண்பட்டைச் சேர்ந்தவர் அறிவரசன். சென்னை மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.
பாரிமுனையில் உள்ள கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தார்.
இன்று காலை அறிவரசன் தனது அறையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். அறையில் ரத்தக்கறை காணப்பட்டது.
அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பூக்கடை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications