ஜூனில் உயரப் போகும் விமானக் கட்டணம்
Subscribe to Oneindia Tamil

இப்போது வெளிநாடுகளுக்கு பறக்கும் பல விமானங்களில் ஓரளவு கட்டணச் சலுகை உள்ளது. ஆனால் இந்தச் சலுகை அடுத்த மாதம் நிறுத்தப்பட்டுவிடும் என்றும் விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
காரணம் அடுத்த மாதத்திலிருந்து கோடை விடுமுறை முடிந்து வர்த்தகப் பயணம் மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் இப்போதே திட்டமிட்டு கட்டணத்தை உயர்த்துகின்றன விமான நிறுவனங்கள்.
இதுகுறித்து இந்தி டிராவல் ஏஜென்ட்ஸ் அஸோஸியஷன்ஸ் தலைவர் ராஜிந்தர் ராய் கூறுகையில், இந்த வாரம் மட்டுமே 10 முதல் 12 சதவிகிதம் வரை பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நிச்சயம் இந்தப் போக்கு வரும் நாட்களில் தொடரும்.
அதை சரியாகப் பயன்படுத்தினால்தான் இதுவரை ஏற்பட்ட இழப்பை சரிகட்ட முடியும் என்பதால் இந்த உயர்வு அமலுக்கு வருகிறது, என்றார்.
பிர்லா குரூப் மற்றும் ரியா டிராவல்ஸும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications