For Daily Alerts
Just In
அரசுப் பாதுகாப்பில் 10,000 விடுதலைப் புலிகள் - ராணுவம்
கொழும்பு: வன்னிப் பகுதியி்ல் போர் தொடங்கியது முதல் முடியும் வரை சரணடைந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலி போராளிகள் அரசு வசம் உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
10 ஆயிரம் பேரில், 7237 பேர் பல்வேறு மறு வாழ்வு மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மறு வாழ்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறதாம். இவர்களில் 1601 பேர் பெண்களாம்.
இவர்கள் தவிர 202 பேர் இடம் பெயர்ந்து வந்தோருக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தனியாகப் பிரித்து தனி மையங்களில் ராணுவம் அடைத்துள்ளதாம்.
இந்த 202 பேரும் அதி நவீன பயிற்சிகள் பெற்ற போராளிகளாம். இவர்களில் பலர் தானாக முன்வந்து சரணடைந்தார்களாம். சிலரை ராணுவம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Sunday, May 24, 2009, 11:34 [IST]