கருணாநிதியுடன் நாராயணன் திடீர் சந்திப்பு - ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: இலங்கை சென்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் தான் பேசியது குறித்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து விளக்கினார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்.

விடுதலைப் புலிகளுடனான மோதல் முடிவுக்கு வந்ததாக ராஜபக்சே அறிவித்ததைத் தொடர்ந்து நாராயணன், வெளியுறவுச் செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஆகியோர் கொழும்பு சென்றனர்.

அங்கு ராஜபக்சேவை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் நாராயணன், முதல்வர் கருணாநிதியை சந்தித்து தனது பயணம் குறித்து விளக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை செல்வதற்கு முன்பு கருணாநிதியை நாராயணன் சந்தித்துப் பேசியிருந்தார்.

இருப்பினும் இலங்கை சென்று வந்த அவர் முதல்வரை சந்திக்கவில்லை. அரசமைப்பு குழப்பம் நிலவி வந்ததால் அவர் சந்திக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சென்னை வந்தார் நாராயணன். இரவு எட்டரை மணியளவில் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் நாராயணன். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.

இலங்கை பயணம், ராஜபக்சே என்ன கூறினார் என்பது குறித்து கருணாநிதியிடம், நாராயணன் விளக்கியதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+