திருச்சியில் பயங்கரம் - குப்பைத்தொட்டியில் உயிரோடு எரிந்த இளம்பெண்
திருச்சி: திருச்சி அருகே குப்பைத் தொட்டியில் ஒரு இளம் பெண் எரிந்து உயிரிழந்தார்.
திருச்சி பொன்மலைப்பட்டி அருகில் பொன்னேரிபுரம் பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் துர்நாற்றத்துடன் கூடிய புகை வந்து கொண்டிருந்தது.
இதை கண்ட அப்பகுதி மக்கள் குப்பைத் தொட்டி அருகில் சென்று பார்த்த போது ஒரு பெண் பாதி உயிருடன் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்பு, இது குறித்து பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில், போலீஸ் உதவி கமிஷனர் பழனிசாமி, இன்ஸ்பெக்டர் பாலசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அதற்குள் அந்த பெண் உடல் முழுவதும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
குப்பைத் தொட்டிற்குள் பெண் வந்தது எப்படி, அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications