உ.பி மாநிலத்தில் குவியல் குவியலாக மண்டை ஓடுகள் கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
அலிகார்: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் நகரில் அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள குளத்தில் குவியல் குவியலாக மண்டை ஓடுகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் செய்யப்படும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல் பாகங்களை இந்த வறண்ட குளத்தில் வீசியிருக்கலாம். அதுதான் இந்த மண்டை ஓடுகளாக இருக்கக் கூடும் என அலிகார் நகர காவல்துறை தலைவர் மான் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்தான் இந்தக் குளம் வறண்டது. இதையடுத்தே அதில் மூழ்கிக் கிடந்த மண்டை ஓடுகள் வெளியே வந்தன.
இந்த மண்டை ஓடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்டவையாக இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தால் அலிகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications