படகு கடலில் மூழ்கியது - 15 பேர் பத்திரமாக மீட்பு
சென்னை: சென்னையில் கடலில் படகு மூழ்கியதில் 15 பேர் மூழ்கினர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.
மெரீனா கடற்கரையைப் போலவே, எலியாட்ஸ் பீச்சிலும் பெருமளவு மக்கள் கூட்டம் கூடுவது வழக்கம். நேற்றும் மக்கள் கூட்டம் அலை மோதியது.
அங்கு மீனவர்கள் சிலர் மீன் பிடி படகில் மக்களை கடலுக்குள் சவாரி அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அதன் ஆபத்தை அறியாமல் கடற்கரைக்கு வந்தவர்களும் பணம் கொடுத்து படகுப் பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பைபர்கிளாஸ் படகு ஒன்றில், 15 பேர் சென்றனர். அந்தப் படகு போய் விட்டுத் திரும்பியதும் அடுத்து ஒரு 15 பேர் சவாரி சென்றனர். அந்தப் படகு கடலுக்குள் போய் விட்டு கரைக்குத் திரும்பும்போது திடீரென நீரில் கவிழ்ந்து விட்டது.
பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி கோவிலுக்குப் பின்புறம் இந்த சம்பவம் நடந்தது. இதனால் கடற்கரையில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கரையில் இருந்த மீட்புப் படையினர் கடலில் குதித்து நீந்திச் சென்று அனைவரையும் பத்திரமாக மீட்டு விட்டனர்.
நான்கு பேர் மட்டும் ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களையும் போராடி மீட்டு விட்டனர்.
3 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததால் அவர்களை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications