மத்திய அமைச்சரவையில் பங்கேற்பு - இன்று முடிவு சொல்கிறது திமுக

மத்திய அமைச்சரவையில் சேருவது தொடர்பாக திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் தரப்பில் சற்று இறங்கி வந்தனர். இதையடுத்து நேற்று முழுவதும் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதி தனது இல்லத்தில் தீவிர ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் இறுதியில் அமைச்சரவையில் சேர முடிவெடுத்ததாக தெரிகிறது.
அதன்படி, மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ராஜா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக்கப்படுவார்கள். கனிமொழிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும். அவருக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியைப் பெற திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாலு துணை சபாநாயகராக்கப்படலாம்...
மூத்தவரான டி.ஆர்.பாலுவுக்கு இந்த முறை அமைச்சரவையில் இடம் கிடைக்காது. அதற்குப் பதில் அவரை லோக்சபா துணை சபாநாயகராக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
3 இணை அமைச்சர் பொறுப்புகளில் இடம் பெறுபவர்களாக ஜெகத்ரட்சகன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் அறியப்படுகின்றனர்.
தயாநிதிக்கு ஐ.டி கிடையாது...?
மு.க.அழகிரிக்கு வேதி மற்றும் உரத்துறை வழங்கப்படலாம்.
தயாநிதி மாறனுக்கு முன்பு கூறப்பட்டதைப் போல தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை வழங்கப்படாது எனத் தெரிகிறது. மாறாக அவருக்கு ஜவுளித்துறை ஒதுக்கப்படலாம்.
ராஜா, மீண்டும் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆக்கப்படலாம்.
கனிமொழிக்கு மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை இணை அமைச்சர் (தனி்ப் பொறுப்பு) கிடைக்கலாம்.
இன்று திமுகவின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
முன்பு டி.ஆர்.பாலு, ராஜா ஆகியோருக்கு கட்டாயம் அமைச்சர் பதவி கிடையாது என காங்கிரஸ் கண்டிஷன் போட்டு வந்தது.
ஆனால் தற்போது திமுக சார்பில் யாரை அமைச்சராக அறிவித்தாலும் அதை ஏற்கத் தயார் என காங்கிரஸ் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications