ஒத்தி வைக்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம்-நாளை மறுதினம் நடக்கும்?

கடந்த வெள்ளிக்கிழமை மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. திமுகவுடன் ஏற்பட்ட பதவி ஒதுக்கீடு குழப்பம் தொடர்பாக 19 கேபினட் அமைச்சர்கள் மட்டும் பிரதமருடன் பதவியேற்றனர்.
இந் நிலையில், திமுகவை சமரசப்படுத்த முயற்சிகள் நடந்தன. அதன் விளைவாக அமைச்சரவையில் சேர திமுக சம்மதம் தெரிவித்து விட்டது. அக்கட்சிக்கு 3 கேபினட் அமைச்சர்கள், நான்கு இணை அமைச்சர் பதவிகள் தரப்படவுள்ளன.
இதுதொடர்பான தனது ஒப்புதலை திமுக நேற்றே தெரிவித்து விட்டது.
இதையடுத்து இன்று மாலை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 10 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 50 இணையமைச்சர்கள் இன்று பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நாட்டின் அனைத்துப் பகுதிகள், முக்கிய சமூகத்தினர், ஜாதிகளுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சரவையை உருவாக்க சோனியா திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர் ஆலோசனைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அமைச்சரவையில் இடம் பிடிக்க காங்கிரசார் மத்தியில் கடும் போட்டா போட்டியும் ஏற்பட்டுள்ளது.
மேலும் திமுகவுக்கு கூடுதலாக கேபினட் அமைச்சர் பதவிகளை வழங்குவதை சரத் பவார், மம்தா பானர்ஜி ஆகியோர் எதிர்ப்பதாலும் தங்களது கட்சியினருக்கு கூடுதல் பதவிகளைக் கேட்பதாலும் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
இதனால் பட்டியலை இறுதி செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து தனது கட்சியில் அமைச்சர் பதவி கேட்போர் மற்றும் கூட்டணித் தலைவர்கள் என அனைவரையும் சமாதானப்படுத்திவிட்டு பின்னர் அமைச்சரவையை விரிவாக்க முடிவு செய்யப்பட்டது.
நேற்று மன்மோகன் சிங்கும், பிரணாப் முகர்ஜியும், சோனியா காந்தியும் விரிவான ஆலோசனை நடத்தினர். இன்று காலையும் இவர்கள் மீண்டும் ஒரு சுற்று ஆலோசனை நடத்தினர்.
ஆனால் இதிலும் பட்டியலை இறுதி செய்ய முடியவில்லை. இதையடுத்து இன்று நடக்கவிருந்த அமைச்சரவைக் கூட்டமும் அமைச்சரவை விரிவாக்கமும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந் நிலையில் இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டமும் பிரதமரின் இல்லத்தில் நடக்கிறது. இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் நாளை மறுதினம் நடக்கலாம் என்று தெரிகிறது.
-
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications