மனைவி இறந்த துக்கம்-கணவன் தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் தற்கொலை கொலை செய்து கொண்டார்.

சத்தியமங்கலம் கொமராபாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் குஞ்சான் (எ) கருப்புச்சாமி (38). விவசாயக் கூலி வேலை செய்து வருபவர். இவரது மனைவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார்.

இதனால் கடந்த இரண்டு மாதங்களாக மனமுடைந்து காணப்பட்ட கருப்புசாமி விஷம் அருந்தி உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே இறந்தார்.

சிகிச்சைக்கு பணமில்லை..கணவர் தற்கொலை:

நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லி வஉசி நகரை சேர்ந்தவர் பழனி. இவர் நயினார்குளம் மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இசக்கிமுத்து.

இவர்களுக்கு திருமணமாகி 1 ஆண்டு ஆகிறது. தற்போது இசக்கிமுத்து 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். பழனி திருமணத்தின்போதே பலரிடம் கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.

அந்த கடனை அவர் இன்னும் அடைக்கவில்லை. இந் நிலையில் மனைவி கர்ப்பம் அடைந்ததும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பழனியிடம் பணம் இல்லை. பலரிடம் பணம் கேட்டும யாரும் தரவில்லை.

இதனால் 1 மாதமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் தவித்துள்ளார். இதனால் மனம் உடைந்த பழனி விஷம் குடித்தார். உடனடியாக அவரை பாளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+