சென்னை-மதுரை போலீஸ் கமிஷ்னர்கள் மாற்றம்
சென்னை: சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டுள்ளார். புதிய கமிஷ்னராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல மதுரை கமிஷ்னரும் மாற்றப்பட்டு்ள்ளார்.
இது குறித்து உள்துறைச் செயலாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு சென்னை சட்டம்-ஒழுங்குப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சட்டம்-ஒழுங்குப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேந்திரன் சென்னை கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தலைமை நிலைய ஐஜி திரிபாதி மாற்றப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளது. சென்னை கூடுதல் கமிஷ்னர் விஸ்வநாதன், சென்னை தலைமை நிலைய ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் அகாடமி ஐஜி நந்தபாலன் மதுரை போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை கமிஷ்னர் ஆபாஸ் குமார் போலீஸ் அகாடமி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
நந்தபாலன் ஏற்கனவே மதுரை கமிஷ்னராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications