மின்வெட்டால் நாடு முழுவதும் ரூ.43,000 கோடி நஷ்டம்
டெல்லி: தாறுமாறான மின் வெட்டு தமிழகத்தில் மட்டுமல்ல, தேசிய அளவில் பெரும் பிரச்சினை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
சீரற்ற மின் விநியோகம், மின்வெட்டு காரணமாக இந்தியாவுக்கு கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ. 43,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல துறைகளிலும் உற்பத்தி மற்றும் பணிகள் முடங்கியுள்ளன.
கடந்த ஆண்டு 11061 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி நடக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதில் 3453 மெகாவாட் அளவுக்குதான் உற்பத்தி செய்யப்பட்டது. அதாவது வெறும் 30 சதவிகிதம்தான் எட்டப்பட்டது. இதனால் பெருமளவு மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
இந்த மின்வெட்டு மற்றும் சீரற்ற மின வினியோகம் காரணமாக நாடுமுழுவதும் பலவேறு வகையில் ஏற்பட்டுள்ள நஷ்டம் 43,000 கோடி ரூபாய் என எமர்சன் நெட்வொர்க் பவர் மற்றும் தகவல் தொழில்நுடப் உற்பத்தியாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் எரிவாயு உற்பத்தி தொடக்கம் மற்றும் அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா கார்ப்பரேஷனின் நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு காரணமாக இந்த ஆண்டு அனல் மின்சார உற்பத்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications