கேபி என்ற பத்மநாதனுக்கு இன்டர்போல் வலை!
கொழும்பு: கேபி என்று விடுதலைப் புலிகள் வட்டாரத்தில் அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் எனப்படும் செல்வராசா பத்மநாதனைக் கைது செய்ய இன்டர்போல் போலீஸார் தீவிரமாகியுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பிரிவின் தலைவராக விளங்கும் பத்மநாதன், புலிகள் இயக்கத்துக்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்முதல் செய்து தருபவராகவும் உள்ளார்.
இன்டர்போல் இவரையும் நீண்ட காலமாக தேடி வருகிறது. தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளுக்கு இவர் அடிக்கடி மாறிக் கொண்டிருப்பது வழக்கம்.
தற்போது பிரபாகரன் மரணம் குறித்துக் கூட இவர் அடுத்தடுத்து குளறுபடியான தகவல்களைக் கூறி வந்தார். இந்த நிலையில், கேபியைப் பிடிக்க இன்டர்போலுக்கு இந்தியாவும், இலங்கையும் மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளன.
இதையடுத்து கேபியைக் கைது செய்ய இன்டர்போல் அதிகாரிகள் மும்முரமாக இறங்கியுள்ளனராம்.












Click it and Unblock the Notifications