தோல்விக்கு காரணம் சிரஞ்சீவி தான்-நாயுடு புலம்பல்
ஹைதராபாத்: நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் அபார வெற்றி பெற்றிருக்கும். ஆனால் சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம் கட்சி காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை பிரித்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு செகந்திராபாத் நகரில் நடந்தது. அதில் நாயுடு பேசுகையில்,
இந்தத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்துவிட்டனர். அவர்களுக்கு எதிராக மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக 36.78 சதவீத மக்கள் மட்டும் ஓட்டு போட்டுள்ளனர். இவர்களை விட தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 1.5 சதவீத ஓட்டுக்கள் தான் குறைவாக கிடைத்துள்ளது.
நாங்கள் இதைவிட அதிக வாக்கு வாங்கியிருக்க முடியும். ஆனால் சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம் கட்சி அந்த ஓட்டுக்களை பிரித்துவிட்டது. அவர்கள் 16.22 சதவீத ஓட்டு வாங்கியுள்ளனர். ஆனால், 18 சட்டசபை தொகுதிகளில் தான் வென்றுள்ளனர். இந்த தேர்தலில் சிரஞ்சீவி செய்த ஒரே வேலை ஓட்டுக்களை பிரித்து காங்கிரசுக்கு உதவியது தான்.
தெலுங்கு தேசம் தொண்டர்கள் அடுத்த தேர்தலில் இதுபற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். சிரஞ்சீவி கட்சிக்கு ஓட்டு போடுவது வீண் என்று மக்களிடம் நன்றாக விளக்க வேண்டும்.
இந்த முறை தேர்தலில் எங்களுக்கு நல்ல முன்னேற்றம் தான். கடந்த முறை 42 சீட் தான் கிடைத்தது. இந்த முறை சிரஞ்சீவி வாக்குகளை பிரித்த போதிலும் எங்கள் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து மக்களுக்காக போராடும். லஞ்சத்தை விரட்ட வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம் என்றார் சந்திரபாபு நாயுடு.
-
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications