ஜூலை முதல் வாரத்தில் ரயில்வே பட்ஜெட்-மம்தா
டெல்லி: ஜூலை முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ரயில்வேத் துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடக்கவிருந்த காரணத்தால் பிப்ரவரியில் இடைக்கால ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தேர்தல் முடிவடைந்து, அமைச்சர்கள் அனைவரும் பதவி பிரமாணம் எடுத்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து ரயில்வே பட்ஜெட் வரும் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ரயில்வேயை பொறுத்தவரை வர்த்தகம் மற்றும் மக்கள் சேவை இரண்டை பார்க்க வேண்டியுள்ளது. இரண்டுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் சரியான விகிதத்தில் பட்ஜெட் தயார் செய்யப்படும். இது ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும்.
ரயில்வே துறை இந்தியாவுன் நாடி துடிப்பு. வருமானத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அதே நேரத்தில் பயணிகளின் வசதி மற்றும் அவர்களின் பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ரயில்வே ஊழியர்களுக்கு 6வது சம்பள குழு பரிந்துரையை அமல் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மம்தா.