கருணாநிதி: காங்கிரசுக்கு வீரமணி எச்சரிக்கை
சென்னை: முதல்வர் கருணாநிதியின் உணர்வு, தமிழர்களின் உணர்வு. அதை அலட்சியப்படுத்தினால் காங்கிரஸ் பின்னால் வருத்தப்பட வேண்டியிருக்கும் என திராவிட கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அரசு செய்த இனப்படுகொலையையும், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை சித்திரவதை படுத்தியதையும், மனித உரிமை மீறல்களையும் சில ஆசிய நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கை நியாயப்படுத்தும் வகையில் தீரமானத்தை நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளது.
சீனா போன்ற நாடுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவும் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது பச்சை தமிழர் விரோத செயல்பாடாகும்.
செவிடன் காதில் ஊதிய சங்கு...
இது தொடர்பாக பிரதமருக்கு இரண்டு நாட்கள் முன்னதாக முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதம் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது. காங்கிரஸ் கட்சிக்காக பழியை சுமந்து தமிழர்களின் ஆவேசத்துக்கு ஆளாகியுள்ள கருணாநிதியின் கருத்தை அவர்கள் அலட்சியப்படுத்துவது கண்டித்தக்கது.
முதல்வரின் உணர்வு, தமிழர்களின் உணர்வாகும், அதை அலட்சியப்படுத்தினால் அதற்காக கொடுக்க வேண்டிய விலை குறித்து அவர்கள் பின்னால் வருத்தப்பட வேண்டியிருக்கும் என அந்த அறிக்கையில வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications