புலிகள் கட்டமைப்பை சீர்குலைத்தது விமானப்படை-தளபதி

அவர் அளித்துள்ள பேட்டியில், விமானப் படையின் தொடர் தாக்குதல்கள் காரணமாக, ராணுவத்தால் புலிகளின் பகுதிகளுக்குள் எளிதில் ஊடுறுவ முடிந்தது. புலிகளின் மறைவிடங்களை எளிதில் தாக்கி அழிக்க முடிந்தது. இதன் விளைவாக விடுதலைப் புலிகளுக்கு ஒட்டுமொத்த சீர்குலைவு ஏற்பட்டது.
மூன்று ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பை அழிக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள்ளாகவே அந்த இலக்கை எட்டி விட்டோம். இதற்கு முக்கிய காரணம் அதிபர் ராஜபக்சேவின் துணிச்சல் மிக்க செயல்பாடுகள்தான். சண்டைக் களத்தில் முப்படைகளும் இணைந்து, ஒருமித்து செயல்பட அவர் கொடுத்த ஆதரவும், காட்டிய ஆர்வமும்தான் காரணம்.
மேலும், எங்களது அதிகாரிகள் குறிப்பாக விமானிகள் மிகவும் தீரத்துடனும், நாட்டுப்பற்றுடனும் செயல்பட்டதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கிடையே ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவை சிதறடிக்கப்பட்டது.
ஆளில்லாத விமானங்கள் மூலம் புலிகளின் நிலைகளை துல்லியமாக தெரிந்து கொண்டு அதன் பின்னர் நாங்கள் அவற்றை தாக்கி அழித்தோம். ராணுவமும், கடற்படையும் எப்போதெல்லாம் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்கள் என்று எங்களிடம் பட்டியல் கொடுத்தார்களோ அப்போதெல்லாம் எங்களது வி்மானிகள் சட்டென்று கிளம்பிப் போய் புலிகளின் மறைவிடங்களை குண்டு வீசித் தாக்கி அழித்தார்கள்.
மேலும் விமானப்படைக்குத் தேவையான விமானங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் அரசு கொடுத்து வந்ததும், தாக்குதல்களில் தொய்வில்லாமல் நாங்கள் ஈடுபட உதவியது என்றார் குணதிலகே.












Click it and Unblock the Notifications