கருணாநிதி-இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு
சென்னை: தமிழர் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நான்கு இலங்கை எம்.பிக்கள் இன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய அந்த நான்கு எம்.பிக்களும் கோபாலபுரம் வீட்டில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் வெளியில் வந்த சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவி கேட்பது குறித்து தமிழக முதல்வருடன் பேசினோம். தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்தோம்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு அமைதியான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பாதுகாப்பான சுமூகமாக தமிழர்கள் வாழ ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும்.
இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத் தயார் என்று முதல்வர் தெரிவித்தார் என்றார்.












Click it and Unblock the Notifications