தனிமை 'சிறையில்' பிரபாகரன் பெற்றோர்!
கொழும்பு: பாதுகாப்பு என்ற பெயரில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெற்றோரை அவர்களது உறவினர்களுடன் சேர விடாமல் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது இலங்கை ராணுவம்.
பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு வவுனியா முகாமில் கண்டுபிடிக்கப்பட்டார்கள். இதை அதிபர் ராஜபக்சேவே அறிவித்தார்.
இவர்களுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் பிரிவு தலைர் சுப. தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் உள்ளிட்ட புலிகள் இயக்க தலைவர்களின் குடும்பத்தினரும் இருக்கின்றனர்.
தற்போது வயதான தமிழ் மக்களை அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர ராணுவம் அனுமதித்துள்ளது. இதன் மூலம் வயதான பெரியவர்கள், தங்களது குடும்பத்தினரின் நேரடிப் பராமரிப்பில் இருக்க முடியும் என்பதால்.
ஆனால் பிரபாகரனின் பெற்றோரை மட்டும் அவர்களது உறவினர்களுடன் சேர ராணுவம் தடை விதித்துள்ளது. தாங்கள்தான் பிரபாகரனின் பெற்றோர் என்று இருவரும் கூறியுள்ளதால், பாதுகாப்பு கருதி அவர்களை தனிமையிலேயே வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், தாங்கள்தான் பிரபாகரனின் பெற்றோர் என அவர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். எனவே அவர்களை பிறரிடமிருந்து பிரித்து வைத்திருக்க விரும்புகிறோம். அவர்களது பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை என்றார்.
வேலுப்பிள்ளைக்கு தற்போது 76 வயதாகிறது. பார்வதி வேலுப்பிள்ளைக்கு 71 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அகதிகள் முகாமில் வேலுப்பிள்ளையம், பார்வதி அம்மாளும் இருப்பது போன்ற ஒரு படத்தையும் இலங்கை அரசுத் தரப்பு வெளியிட்டுள்ளது. பிளாஸ்டிக் சேரில் வேலுப்பிள்ளை அமர்ந்திருக்க, அவர் அருகில் நின்று கொண்டிருக்கிறார் பார்வதி அம்மாள்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications