சென்னையில் சவ அடக்கத்தின்போது மதக் கலவரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சவ அடக்கம் தொடர்பாக இரு வேறு மதத்தினரிடையே இன்று சென்னையில் திடீர் மோதல் மூண்டது.
சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் ஒரு மதத்தினருக்குச் சொந்தமான அடக்கத் தலம் உள்ளது. அந்த இடத்தில் இன்று வேறு ஒரு மதத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்தனர்.
இதனால் மாற்று மதத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. தகவல் அறிந்ததும் உடனடியாக போலீஸார் விரைந்து வந்தனர்.
இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இருப்பினும் அந்த இடத்தில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது. இதனால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மத மோதல் குறித்து காவல்துறை தரப்பி்ல் விசாரித்தபோது அப்படி ஏதும் இல்லையே என்று கூறி விஷயத்தை மூடி மறைக்கப் பார்த்தனர்.












Click it and Unblock the Notifications