Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொலையான தமிழர் எண்ணிக்கையை மறைக்கவில்லை-மூன்

Subscribe to Oneindia Tamil

Ban Ki Moon
ஐ.நா: இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை ஐ.நா. மூடி மறைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அதன் பொதுச் செயலாளர் பான் கி மூன் மறுத்துள்ளார்.

பான் கி மூனும் அவரது செயலாளரான விஜய் நம்பியாரும் இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பலியான ஆயிரக்கணக்கான தமிழர்களின் சாவை மூடி மறைத்ததாக பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

கடைசி கட்டப் போரில் புலிகளைக் கொல்கிறோம் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதில் சிறார்கள், பெண்கள், முதியோர் என யாருமே தப்பவில்லை.

இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்தியா, ஐநா போன்றவையும் இலங்கைக்கு ஆதரவாக அமைதி காத்ததால் ராணுவம் கண்மூடித்தனமாக தமிழர்களைக் கொன்று குவிந்தது. 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் வரை கொல்லப்பட்டுவிட்டனர்.

இந்தத் தகவலை பிரிட்டனின் டைம்ஸ், பிரான்ஸ் லா மொன்டே ஆகிய பத்திரிக்கைகள் படங்களோடு வெளியிட்டன. ஆனால், பான் கி மூனோ இந்த சாவுகளை மூடி மறைக்க முயன்றார். இதற்கு இலங்கையோடு ஒட்டி உறவாடும் விஜய் நம்பியார் போன்றவர்களும் உதவினர்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பான் கி மூன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஐநா பொதுச் சபையில் பேசிய அவர், நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். நாங்கள் சாவு எண்ணிக்கையை திட்டமிட்டு குறைத்து மதிப்பிடவில்லை. அங்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியாது. ஆனால், மிக அதிகமான இறப்புகள் நடந்துள்ளது உண்மை. அதை ஏற்கத்தக்கத்தல்ல என்றார்.

ஆனால், இதுவரை இந்தக் கொலைகள் குறித்து விசாரணைக்கு பான் கி மூன் உத்தரவிடவில்லை என்பதும், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இது குறித்து சர்வதேச விசாரணை நடத்தும் திட்டத்தை இந்தியா, சீனாவின் ஆதரவோடு இலங்கை முறியடித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏப்ரலில் கடைசியில் ஆரம்பித்து போர் முடியும் வரை தினந்தோறும் குறைந்தபட்சம் 1,000 தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்ததாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக இது குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. பார்வையாளர் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட ஆயுதங்கள்...

மேலும் இலங்கையில் நடந்த இறுதி கட்ட போர் குறித்து 'அமெரிக்கா' என்ற பத்திரிகை தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிலரிடம் பேட்டி கண்டு வெளியிட்டுள்ள செய்தியில்,

வன்னி பகுதியில் இறுதிக்கட்ட போரின் போது கடைசி சில நாட்களில் மட்டும் 25,000 முதல் 30,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியே இவர்களை கொன்றுள்ளனர். கொத்துக் குண்டு, ரசாயண குண்டு ஆகியவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.

தற்போது மோதல் நடந்த இடம் சுடுகாடாகவே காட்சியளிக்கிறது. அங்கு எல்லா கட்டிடங்களும் அழிக்கப்பட்டு விட்டன என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் கோரிக்கை விடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+