For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரேஷ் குப்தாவை சஸ்பெண்ட் செய்ய கோரி வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

Naresh Gupta
மதுரை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை சஸ்பெண்ட் செய்ய கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொது நல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

லால்குடி கீழ அரசூர் யூனியன் கவுன்சிலர் பார்த்திபன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில்,
மக்களவைத் தேர்தலில் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ‌ரேஷன் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்தி வாக்களிக்க மக்களுக்கு அனுமதி தரப்பட்டது.

ஆனால், நான் வசிக்கும் திருச்சி தொகுதி உள்பட தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் ரேஷன் கார்டை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இதற்கு தமிழக தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தா தான் காரணம். இதனால் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட வேண்டும்.

மேலும் தமிழகத்தில் விரைவில் நடக்கவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தலில் ரேஷன் கார்டுகளை அடையாள அட்டையாக பயன்படுத்தி வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார், நீதிபதி அக்பர் அலி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இது தொடர்பாக தேர்தல் ஆணையம், திருச்சி மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X