இலங்கைக்கு சிறப்பு தூதரை அனுப்ப இந்தியா திட்டம்?

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தற்போது ஏராளமான தமிழர்கள் அகதிகளாய் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு போதிய உணவு, நீர், கழிப்பிட வசதிகள் இல்லாத நிலையில் அவர்கள் பெரும் கொடுமையான சூழலில் வசித்து வருகின்றனர்.
இது குறித்து ஐ.நா., ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்தாலும் இந்தியா மட்டும் கவலைப்படாமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந் நிலையில் தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க இலங்கை அதிபர் ராஜக்சே டெல்லி வர திட்டமிட்டுள்ளார்.
ஆனால், முகாம்களில் நிலவும் மோசமான சூழ்நிலையை சரி செய்துவிட்டு வருமாறு அவரிடம் மத்திய அரசு கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவரது வருகை தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும், அவர்களை வசிப்பிடங்களுக்கே திருப்பி அனுப்பவும் நடவடிக்கைகள் எடுக்க இலங்கையுடன் இணைந்து செயல்பட இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக விவாதிக்க சிறப்புத் தூதர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பி அந் நாட்டு அரசுடன் பேச்சு நடத்த மத்திய திட்டமிட்டுள்ளது.
மறுபடியும் நாராயணனையோ மேனனையோ அல்லது நம்பியார்களையோ அனுப்பாமல் தமிழர்கள் குறித்து உண்மையிலேயே கவலை கொண்ட யாரையாவது மத்திய அரசு அனுப்பும் என்று நம்புவோம்.












Click it and Unblock the Notifications