குஜராத் மதக் கலவரம்-மோடியை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை அந்த மாநில அரசு உரிய முறையில் விசாரித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதால் இது குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.
சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ஆர்.கே. ராகவன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்குளை விரைவில் முடிக்க சிறப்பு நீதிமன்றங்களையும் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தக் குழு ஜூலை 26ம் தேதிக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நரேந்திர மோடி, பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிடோரை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒரு கர்ப்பிணியான முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளிருந்த சிசுவை வெளியில் தூக்கி வீசியதாக பாபு பஜ்ரங்கி மீது குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏகப்பட்ட பேரை விசாரிக்கவுள்ளதால் தனது அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு கூடுதல் அவகாசம் கோரும் என்று தெரிகிறது.
இந்தக் குழு தான் மோடியின் அமைச்சரவையைச் சேர்ந்த பெண் அமைச்சரான மாயா கோதானியை நரோடா பாடியாவில் நடந்த வன்முறைகள் தொடர்பாக கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
-
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications