இந்தியாவில் எச்சரிக்கையாக இருங்கள்-யுஎஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம் என்பதால் இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் தங்கள் வசிப்பிடம், ஹோட்டல்கள், சாலைகள் என அனைத்து இடங்களிலும் எப்போதுமே எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை திரும்பப் பெறுமாறு அமெரிக்காவிடம் கூறுவோம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இந்தியா மிகவும் பாதுகாப்பான நாடு. இங்கு வெளிநாட்டவர் அச்சமின்றி வரலாம். அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கையை திரும்பப் பெறச் செய்ய இந்தியத் தரப்பில் எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications