தமிழகத்தில் வாழும் அகதிகளை ஏற்போம்-இலங்கை
கொழும்பு: தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்கள் இலங்கை வந்தால், அவர்கள் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்கள் இலங்கை வருவதற்கு எந்த தடையும் இல்லை என இலங்கை செய்தித் துறை அமைச்சர் அனுரா பிரியதர்சனா தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
முதல் கட்டமாக வடக்கு பகுதி முகாம்களில் தங்கியிருக்கும் 2 லட்சத்து 72 ஆயிரம் தமிழர்களை நிரந்தமராக அவர்களது சொந்த வீட்டுக்கு திருப்பியனுப்ப திட்டமிட்டு்ள்ளோம்.
இதற்காக ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர் பசில் ராஜபக்சே தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை வேகமாக செய்து முடிக்கும்.
இன்னும் 6 மாதத்துக்குள் வடக்கில் இடம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனைகள் முடிக்கப்படும்.
தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்கள் இலங்கை வந்தால், அவர்கள் மீண்டும் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்கள் வருவதற்கு எந்த தடையும் இல்லை. அவர்களும் எங்கள் நாட்டு மக்கள் தான். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்போம்.
வடக்கில் தமிழ் மக்களின் துயர துடைக்க இலங்கை அரசு 26 சமுதாய வளர்ச்சி மையங்களை அமைத்து வருகிறது. போதுமான டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை கொண்ட 15 மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சுமார் 6,740 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications