நெல்லை-பள்ளிக்கு பூட்டு போட்ட பெற்றோர்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் துவக்கபள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெற்றோர்கள் அந்த பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் அ.சாத்தான்குளம் பகுதியில் டிடிடிஏ தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய கனகராஜ் மசிலாமணியை, மாவட்ட கல்வி நிர்வாகம் இட்டமொழியில் இருக்கும் பள்ளி ஒன்றுக்கு பணிமாற்றம் செய்தது.
இதையடுத்து அதிருப்தியடைந்த கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு மாணவ, மாணவிகளை வெளியேற்றினர். பின்னர் பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.
இந்நிலையி்ல் இட்டமொழியில் இருந்து இப்பள்ளிக்கு மாற்றலாகி வந்த தலைமை ஆசிரியர் அலீஸ் கோயில், பள்ளிக்கு சென்று பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம மக்களில் சிலர் கூறுகையில், தலைமை ஆசிரியர் கனகராஜ் மசிலாமணி பள்ளிக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்தவர். இதனால் எங்கள் பள்ளி நாங்குநேரி சரகத்தில் சிறந்த பள்ளியாக உள்ளது. அவரை மீண்டும் இங்கு பணியாற்ற நிர்வாகம் உத்தரவிட வேண்டும். இல்லையேல் எங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்ப்போம் என்றனர்.