விரும்பிய பாட பிரிவு கிடைக்காத மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ் ஒன்னில் தான் விரும்பிய பாடப் பிரிவில் சேர்க்க பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (16) சாந்தோமில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 10ம் வகுப்பு படித்தார். பொதுத் தேர்வில் 390 மதிப்பெண் பெற்ற இவர் பிளஸ் ஒன்னில் அதே பள்ளியில் கணக்குப் பதிவியியல் பாடப் பிரிவில் சேர விண்ணப்பித்தார்.
ஆனால் பள்ளி நிர்வாகம் 394 மதிப்பெண் இருந்தால் தான் கணக்குப் பதிவியல் பாடப் பிரிவில் சேர்க்க முடியும் என்று கூறி வரலாறு பாடப் பிரிவில் தான் சேர்க்க முடியும் என்று கூறிவிட்டது.
இதனால் அழுதபடியே வீடு திரும்பிய அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications