பெண் டாக்டரிடம் ரூ1.13 கோடி மோசடி-பெண் கைது
சென்னை: பெண் டாக்டரிடம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்றுத் தருவதாக கூறி அதற்கான கமிஷனாக ரூ. 1.13 கோடியை வாங்கிக் கொண்டு மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை எழும்பூரை சேர்ந்த டாக்டர் சித்ரா கடந்த 2007ம் ஆண்டு போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில்,
மாயா ராம் என்ற ஒரு பெண் தன்னை டாக்டர் என்று கூறிக் கொண்டு அறிமுகமானார். இவரது நண்பர்கள் பிரான்சில் ஒரு டிரஸ்ட் ஒன்று நடத்தி வருவதாகவும், அந்த டிரஸ்டுக்குச் சொந்தமான ரூ.55 ஆயிரம் கோடி பணத்தை டெல்லியில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளதாகவும்,
இந்தியாவில் மருத்துல சேவை புரியும் நிறுவனங்களுக்கு அவர்கள் நிதியுதவி செய்து வருவதாகவும் கூறினார். மேலும் நான் மருத்துவமனை கட்டுவதற்காக ரூ.1,000 கோடி நிதியுதவியை பெற்றுத் தருவதாகவும் கூறி, அதற்கான கமிஷனாக ரூ.1.13 கோடியை வாங்கிக் கொண்டார்.
ஆனால், நிதியுதவியும் வரவில்லை. நான் கொடுத்த கமிஷன் பணத்தையும் திருப்பி தராமலும் தலைமறைவாகி விட்டார் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. உதவி கமிஷனர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் 2 ஆண்டுகளாக விசாரணை நடத்தி தலைமறைவான மாயா ராமை (57) தேடி வந்தனர்.
இந் நிலையில் அவர் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த தனிப் படை அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தது.
அவரிடம் விசாரித்ததில் இதுபோல பல டாக்டர்களை இவர் ஏமாற்றிய விவரம் தெரியவந்தது.
மாயா ராமிடம் இருந்த 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை போலீஸ் காவலில் எடுத்து முழுமையாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம்












Click it and Unblock the Notifications