பிரதமருக்கு முதன் முறையாக பெண் பாதுகாப்பு அதிகாரி
டெல்லி: முதல் பெண் ஜனாதிபதி, முதல் பெண் சபாநாயகர் ஆகியோர் வரிசையில் தற்போது பிரதமருக்கான முதல் பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து இந்திய பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஐபிஎஸ் அதிகாரிகளே. இவர்கள் பிரதமர், அவரது குடும்பத்தினர் மற்றம் முன்னாள் பிரதமர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இதுவரை ஆண்கள் மட்டுமே வகித்து வந்த இந்த பதவியில் தற்போது முதன் முறையாக பெண் ஒருவரும் சேர இருக்கிறார். அவர் பெயர் பினிதா தாகூர். 1996ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற இவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.
ராஜஸ்தானில் போதை கும்பல்களை ஒடுக்கியது, கொள்ளையர்களை ஒழித்தது, விவசாயிகளின் அத்தமீறல் போராட்டங்களை தடுத்தது போன்ற துணிகர செயல்களால் காவல் துறையில் சிறப்பான பெயர் வாங்கியுள்ளார்.
தற்போது ஜெய்ப்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் டிஐஜியாக இருக்கும் அவர் கூறுகையில்,
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு மேல் இருக்கும் உயரதிகாரிகள் பணி ஆணை வழங்கும் முன் இது குறித்து என்னால் இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications