நாட்டிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்-நிதிக் கமிஷன்

மத்திய வரி வருவாயை பகிர்ந்து கொள்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் விஜய் கேல்கர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே மிக வேகமான வளர்ச்சி அடைந்து வரும் மாநிலமாக விளங்குகிறது.
2007-08ம் ஆண்டில், தேசிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனி நபரின் பங்களிப்பு ரூ.27,502 ஆக இருந்தது. ஆனால் தமிழகத்தில் இது ரூ.32,080 ஆக இருந்தது. இது மிகச் சிறப்பான சாதனையாகும்.
தமிழகத்தில் மனிதவள மேம்பாட்டு குறியீடுகள் சிறப்பாக உள்ளன. கல்வியறிவும் அதிகமாக உள்ளது. குழந்தை இறப்பு வீதமும் குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் மிகக் குறைவாக உள்ளது.
ஏழை மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் சிறப்பாக உள்ளன.
தமிழகத்தில் 2007-08ம் ஆண்டு வரி அல்லாத வருவாய் ரூ.3,304 கோடியாக இருந்தது. இது 2008-09ம் நிதியாண்டில் ரூ.5,645 கோடியாக அதிகரித்துள்ளது. இது, அரசு நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகை விடுவது என்ற தைரியமான முடிவால் கிடைத்த லாபமாகும். இதை மற்ற மாநிலங்களும் பின்பற்றுமாறு பரிந்துரைப்போம்.
சாலை, மேம்பாலம், குடிநீர் வினியோகம் மற்றும் சுகாதாரத் திட்டங்களிலும் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. தமிழகத்தில் மின்வாரிய செயல்பாடும் சிறப்பாக உள்ளது. அதில் உள்ள சில பிரச்சினைகளை தீர்ந்து விட்டால், மின்துறையில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும்.
நகர்ப்பகுதி குடியேற்றம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகமாக உள்ளது. 2001ல் 44 சதவீதமாக இருந்த நகர்ப்புற குடியேற்றம் 2010ல் 54 சதவீதமாக அதிகரிக்கும்.
அதே போல தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் இந்த மாநிலத்தில் மிகச் சிறப்பாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இத் திட்டத்தின்கீழ், நாட்டின் 22 சிறந்த மாவட்டங்களில் தமிழகத்தில் 3 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு்ள்ளன.
தமிழ்நாடு எப்போதுமே மற்ற மாநிலங்கள் பின்பற்றத்தக்க வகையில், முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவது கவனிக்கத்த்ககது.
மத்திய வரி வருவாயில் இருந்து ரூ.25,000 கோடி நிதியை வழங்க வேண்டும் என்றும் தமிழகம் கோரியுள்ளது. அதை கவனமாக பரிசீலிப்போம்.
இந்த சிறப்பான வெற்றிகளை ஈட்டியுள் தமிழக அரசுக்கு பாராட்டுகள் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications