சென்னை தீம் பார்க்கில் ரயில் மோதி பெண் பலி
சென்னை: சென்னை அருகே பூ்நதமல்லியில் உள்ள குயீன்ஸ்லான்ட் பொழுது போக்குப் பூங்காவில் சிறார்கள் உல்லாச பயணம் மேற்கொள்ளும் பொம்மை ரயில் மோதி அங்கு பணியாற்றி வந்த 50 வயதுப் பெண் பலியானார்.
பூந்தமல்லி அருகே பாப்பாஞ்சத்திரம் என்ற இடத்தில் குயீன்ஸ்லான்ட் பொழுது போக்கு பூங்கா உள்ளது. இங்கு ஞானமணி என்ற 50 வயதுப் பெண் தோட்டப் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
அவர் பணியில் இருந்தபோது சிறார்கள் பயணம் செய்யும் உல்லாச ரயில் ஞானமணி மீது மோதி விட்டது. இதில் ரயில் சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட ஞானமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் ஞானமணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
ரயிலை ஓட்டிய டிரைவர் சேகர் மற்றும் குணசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே பொழுதுபோக்குப் பூங்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படகு சவாரியின்போது மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
இந்த நிலையில் ரயில் மோதி ஒரு பெண் பலியாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications