ஸ்ரீபெரும்புதூர்: பஸ்-லாரி மோதலி 4 பேர் பலி
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று பஸ், லாரி நேருக்கு நேர் மோதி கொண்ட கோர விபத்தில் 4 பேர் பலியானார்கள்.
சென்னையில் இருந்து வந்தவாசி நோக்கி நேற்று மதியம் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. சுமார் 2.20 மணிக்கு வண்டி ஸ்ரீபெரும்புதூர் அருகே வி.ஆர்.பி.சத்திரம் சென்று கொண்டிருந்த போது பஸ் டிரைவர் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக பஸ், லாரியின் வலது பக்கத்தில் பலமாக மோதியது. இதையடுத்து பஸ்சின் இடதுபாகம் முற்றிலுமாக சேதமைடந்து சுக்கு நூறாக நொறுங்கி போனது.
இதில் பஸ்சின் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த என்ஜினியரிங் மாணவர் மோகன்ராஜ்(24), காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார்(21) மற்றும் அடையாளம் தெரியாத சுமார் 30 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் சம்பவ இடத்திலே பலியாயினர்.
படுகாயமடைந்த 13 பேர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.