மெக்சிகோ: 29 குழந்தைகள் தீயில் கருகி பலி

Subscribe to Oneindia Tamil

Inferno
சோனோரா (மெக்சிகோ): வட மேற்கு மெக்சிகோவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தி்ல 29 குழந்தைகள் பரிதாபமாக கருகி இறந்தன.

ஏபிசி டேகேர் சென்டர் எனப்படும் அந்தக் காப்பகம் அரசால் நடத்தப்படுவதாகவும். இங்கு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினசரி பகலில் விடப்படுவது வழக்கம். வேலைக்குப் போவோர் தங்களது குழந்தைகளை இங்கு விட்டுச் சென்று மாலையில் திரும்ப கூட்டிக் கொண்டு போய் விடுவார்கள்.

சோனாரா மாகாணத்தின் ஹெர்மோசில்லா என்ற இடத்தில் இக்காப்பகம் உள்ளது.

இங்கு திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் குழந்தைகள் சிக்கிக் கொண்டன. தீயில் சிக்கி 6 மாதம் முதல் 5 வயது வரையிலான 29 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

பெரும்பாலான குழந்தைகள் தீயில் கருகியும், மூச்சுத் திணறியும் இறந்துள்ளன.

தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அருகில் உள்ள ஒரு டயர் நிறுவனத்திலிருந்து தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

பல குழந்தைகள் தீக்காயம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

தமிழகத்தில் கும்பகோணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல நடந்த கோர விபத்தில் 90 குழந்தைகள் பலியானது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+