அட்லான்டிக் கடலில் பயங்கர பூகம்பம் - சுனாமிக்கு வாய்ப்பில்லை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அட்லான்டிக் கடலின் மையப் பகுதியில், பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் சுனாமி அலைகள் எழ வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இது 6 என்ற அளவில் பதிவாகியுள்ளது. கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி ஏற்படுமோ என்ற பீதி ஏற்பட்டது. இருப்பினும், சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆன்டிகுவாவில் உள்ள செயின்ட் ஜான்ஸிலிருந்து கிழக்கு வடகிழக்கே 1802 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 10 அடி ஆழத்தில், பூகம்பம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications